Sunday, November 23, 2008

க‌விஞ‌ர் வாலியின் கவிதை

வாலியின் கவிதையுடன் என் கவிதயும் இணைந்தால் அது எப்படியிருக்கும் என்பதை பாருங்கள்:வாலி திருச்சி வானொலி நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது அவர் ஒரு கவிதை எழுதினாராம்.,(எப்போதோ படித்தாக ஞாபகம்)அது என்னவென்றால்......
தன் தலையை

சீவியவனுக்கே!

தண்ணீர் தருகிறது
இளிநீ!!
என்னொவொரு அருமையான கவிதை பாருங்க.
இதை படிச்சதுக்கப்புறம் நம்ம சும்மா இருப்போமா.,
எழுதுடா விலெகா கவிதயை....

கேள்வி:

தன் தலையை

திறந்தவனுக்கெ!

போதை தருகிறது

பீர்!

ஆனால்.........

தன் மண்டையை

திறந்தவனுக்கு!

என்ன தருகிறான்

மனிதன்!


இப்ப‌டி நான் க‌விதை எழுதினா தெரிஞ்ச‌வ‌ங்க‌ளே அனானியா வ‌ந்து ஆணீய‌ புடுங்குறாங்க :))

இப்போ தெரிஞ்சுருக்குமே வாலிக்கும், காவாலிக்கும்(நாந்தாங்க) உள்ள வித்தியாசம்.
இருந்தாலும் ஆர்வக்கோளாரு நம்மளை இருக்க விடமாட்டேங்கிற‌து.ம‌ண்டைய‌(!) கொடைஞ்சி ஒரு க‌விதயும் எழுதிட்டேன்.(ந‌ல்லா மாட்டிகிட்டீங்க‌ போங்க‌)

சுய‌ந‌ல‌வாதி..

என் அப்பாவும் சுய‌ந‌ல‌வாதிதான்


த‌ன் க‌ன‌வுக‌ளை என் மீது சும‌த்தி

என்ன‌யும் பெரிய‌வான்னாக்கியதால்
..

மாற்ற‌ம்?

ஆறு வ‌ருட‌ம் க‌ழித்து

ஊருக்கு வ‌ந்த‌ என்னிட‌ம்

அம்மா கேட்டாள் என்னிட‌ம்

ஏதாவது தெரிகிற‌தா மாற்ற‌ம் என்று

எப்ப‌டி சொல்வேன் என் அம்மாவிட‌ம்

என் காதலிதான் என் ந‌ண்ப‌னின்
மனைவியென்று !

என் க‌விதைய‌ ப‌டிச்சிட்டு வாலி என்ன‌ சிரி சிரிக்கிறார் பாருங்க‌..

அதுனாலே ஐயாமார்களே கோவ‌ப்ப‌டாம‌ ஒரு ஓட்டை போடுங்க‌:))

3 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

//
எப்ப‌டி சொல்வேன் என் அம்மாவிட‌ம்

என் காதலிதான் என் ந‌ண்ப‌னின் மனைவியென்று !//

இந்த வரிகள் எழுதியவருக்கு வலி கொடுக்கும்... படிப்பவருக்கு நகைச்சுவையாக இருக்கும்... சூப்பர்ங்க...

விலெகா said...

VIKNESHWARAN said...
//
எப்ப‌டி சொல்வேன் என் அம்மாவிட‌ம்

என் காதலிதான் என் ந‌ண்ப‌னின் மனைவியென்று !//

இந்த வரிகள் எழுதியவருக்கு வலி கொடுக்கும்... படிப்பவருக்கு நகைச்சுவையாக இருக்கும்... சூப்பர்ங்க...
நன்றி
VIKNESHWARAN

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி.

தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php