Monday, November 24, 2008

க‌லைஞ‌ர் பாடும் பாட்டு!

இப்போ இருக்கிற சூழ்நிலையில நம்ம அரசியல் கட்சித்தலைவர்கள் அனவருக்கும், ஆளாளுக்கு ஒரு பிரச்சனை இருக்கு.(ஆமா, என்னைக்குதான் இவுங்க பிரச்சனை பண்ணாம இருந்துருக்காங்க!) இது மாதிரி நேரத்துல அவங்கள பாடச்சொன்னா என்ன பாட்டு பாடுவாங்க...
..............................**************.........................
நம்ம பாடச்சொன்னப்ப கலைஞர் இப்படி பாடுகிறார்:"என் வீட்டு கன்னுக்குட்டி என் மீது மல்லுகட்டி என் மார்பில் முட்டுதடா மாறா என் மாறா"

அப்புடியே "மாறா"ம இருங்க., நாங்க அடுத்த இடத்துக்கு போறோம்,
.............................*****************..................................
வை.கோ யார் மேல கோபமா இருக்கார்னு தெரியல விசும்பிக்கிட்டெ இப்புடி பாடுறார்: "சொர்க்கமெ என்றாலும் அது நம்ம ஊர போல வருமா? அது லண்டனே என்றாலும் நம்ம லால்குடிக்கு ஈடாகுமா"

ஈடாகாவே,ஆகாதுங்க,.நீங்க பாடுவ‌தை மட்டும் நிறுத்துங்க.இல்லாட்டி சுத்தி இருக்கிரற‌வுகளுக்கு ஏதாச்சும் ஆகிப்போயிரும்.
...........................**************.............................
சரி வாங்க ஒரு எட்டு தைலாபுரம் போயிட்டு வந்துருவோம்னு போனா அங்க நம்ம மருத்துவரய்யா:"மாம்பழம் விக்கிற கண்ணம்மா உன் மனசுக்குள்ள என்னம்மா,என் கூட்டணி வச்சுக்க சம்மதமா" .
ஐய்யாயோன்னு நாம தெரிச்சு ஓடிவந்துக்கிட்டு இருக்கையில..
.............................***************..............................
பொள்ளாச்சியில நம்ம கேப்டன் சார் சூட்டிங் நடக்குதுஙக.அதுல ஒரு பாட்டு வருதுங்க என்னன்னா:"தனியெ தன்னந்தனியே நான் காத்து காத்து இருந்தேன்,மனமே பொறு மனமே கம்யூனிஸ்டு வருவார்கள் மனமே".
லால லாலலா லால லாலலா பாட்டா இருக்குமுனு பார்த்தா இது நொந்த லாலா பாட்டாலப்பா இருக்கு..
.....................************.......................
இப்புடி அவுங்க‌ பாட்டை கேட்டதில்ல‌ என் ம‌ண்ட‌ காஞ்சி, ம‌றை க‌ழ‌டும் நேர‌த்தில‌ திருவாள‌ர் பொதுஜ‌ன‌ம் இப்புடி பாடுறாங்க‌:"தி.மு.க‌ ஆண்டா என்ன?, அ.தி.மு.க ஆண்டா என்ன? உழைச்சாதான் ந‌ம்ம‌ளுக்கு சோறு".
................****************.......................
உண்மைதாங்க‌ நான் என் பொழ‌ப்ப‌ பாக்குறேன் சாமீ "பாட்டு கேட்டா வீட்டுக்கு யாரு கொடுப்பா சோறு ".

நீங்களும் எனக்கு ஒரு ஓட்டைபோட்டுட்டு போயிருங்க:))

Sunday, November 23, 2008

புளிச்சமாவு!!!

சும்மா இருக்க முடியாம கவித(?)எழுத போறேனு போயீ தமிழச்சி,வாலி,தாய்க்காவியம்.,இப்புடீன்னு எழுதி அவஸ்தைப்பட்டு,காரி துப்பப‌ட்டு,கடைசியா இனிமே ஒழுங்கா இருப்பியான்னு உன்னாலே உன்னை உதக்கப்பட்டு...

போதுமுடா நிருத்துடா!! கிறுக்கன் மாதிரி !(என் மனசாட்சி தாங்க)
...................***********************...........................
அதுனால இவுங்க என்ன பேசுறாங்கன்னு கேளுங்க..
மனைவிக்கிட்டெ வந்து கணவன் இப்புடி கேக்குறாரு,ஏம்பா ப்ரிட்ச்ல என்ன வாடை வருது., அதுக்கு அவுங்க சொல்றாங்க,அதுவா புளிச்சமாவு இருக்கு. நாளைக்கு உங்க அம்மா வர்றாங்கள்ல‌ அவுங்களுக்கு தோசை சுட்டுகொடுக்கிறதுக்காக வச்சுருக்கேன்!!!
இப்புடிதாங்க நெறையா வீட்டுல நடக்குது.
...........................***************************.......................
தோழிங்க இரண்டு பேரு இப்புடி பேசிக்கிறாங்க.,ஏய் மாலா இங்க பாரு நேத்து அஜித் வந்து என்னை கல்யாண பண்ணிக்கிற மாதிரி கனவு கண்டேண்டி,அதுக்கு மாலா சொல்றாங்க ஆமாண்டி நான் கூட ஒரு கனவு கண்டேன், அதுல ஷாலினி உன்னை வெலக்கமாத்துல அடிக்கிறமாதிரியே இருந்துச்சு.
இந்த புள்ளையல பாருங்களே!
.....................................*********************..............................
நம்மாளு ஒருத்தர் இப்புடி பாட்டு பாடுகிறார்"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" அதுக்கு நம்மாளுவோட மனைவி இப்புடி பாடுறாங்க "கணவன் அமைவதெல்லம் சைத்தான் கொடுத்த வரம்".
நம்மாளு எப்பவுமே வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டாருங்க..
.............................*********************.............................
ஏட்டய்யா ஒருத்தரு தண்ணியடிச்சுட்டு வண்டி ஓட்டிக்கிட்டு போன நம்மாள புடிச்சு.,"ஏன்யா தண்ணீயடிச்சுட்டு வண்டி ஓட்டிக்கிட்டு போறேன்னு கேட்குறாரு,அதுக்கு நம்மாளு சொல்றாரு தண்ணிபோடலனா வண்டி ஓட்ட முடியாதுங்க சார்"
ஏட்டையா இனிமே ஏதாச்சும் கேட்பாருங்கிறிய!
............................**************************..........................

இத படிச்சிட்டு வெறிகொண்ட வேங்கையா மாறாமல் எனக்கு ஒரு ஓட்டை போடுங்க சாமீயோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

க‌விஞ‌ர் வாலியின் கவிதை

வாலியின் கவிதையுடன் என் கவிதயும் இணைந்தால் அது எப்படியிருக்கும் என்பதை பாருங்கள்:வாலி திருச்சி வானொலி நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது அவர் ஒரு கவிதை எழுதினாராம்.,(எப்போதோ படித்தாக ஞாபகம்)அது என்னவென்றால்......
தன் தலையை

சீவியவனுக்கே!

தண்ணீர் தருகிறது
இளிநீ!!
என்னொவொரு அருமையான கவிதை பாருங்க.
இதை படிச்சதுக்கப்புறம் நம்ம சும்மா இருப்போமா.,
எழுதுடா விலெகா கவிதயை....

கேள்வி:

தன் தலையை

திறந்தவனுக்கெ!

போதை தருகிறது

பீர்!

ஆனால்.........

தன் மண்டையை

திறந்தவனுக்கு!

என்ன தருகிறான்

மனிதன்!


இப்ப‌டி நான் க‌விதை எழுதினா தெரிஞ்ச‌வ‌ங்க‌ளே அனானியா வ‌ந்து ஆணீய‌ புடுங்குறாங்க :))

இப்போ தெரிஞ்சுருக்குமே வாலிக்கும், காவாலிக்கும்(நாந்தாங்க) உள்ள வித்தியாசம்.
இருந்தாலும் ஆர்வக்கோளாரு நம்மளை இருக்க விடமாட்டேங்கிற‌து.ம‌ண்டைய‌(!) கொடைஞ்சி ஒரு க‌விதயும் எழுதிட்டேன்.(ந‌ல்லா மாட்டிகிட்டீங்க‌ போங்க‌)

சுய‌ந‌ல‌வாதி..

என் அப்பாவும் சுய‌ந‌ல‌வாதிதான்


த‌ன் க‌ன‌வுக‌ளை என் மீது சும‌த்தி

என்ன‌யும் பெரிய‌வான்னாக்கியதால்
..

மாற்ற‌ம்?

ஆறு வ‌ருட‌ம் க‌ழித்து

ஊருக்கு வ‌ந்த‌ என்னிட‌ம்

அம்மா கேட்டாள் என்னிட‌ம்

ஏதாவது தெரிகிற‌தா மாற்ற‌ம் என்று

எப்ப‌டி சொல்வேன் என் அம்மாவிட‌ம்

என் காதலிதான் என் ந‌ண்ப‌னின்
மனைவியென்று !

என் க‌விதைய‌ ப‌டிச்சிட்டு வாலி என்ன‌ சிரி சிரிக்கிறார் பாருங்க‌..

அதுனாலே ஐயாமார்களே கோவ‌ப்ப‌டாம‌ ஒரு ஓட்டை போடுங்க‌:))

Saturday, November 22, 2008

தமிழச்சியிடம் ஒரு கவிதை




தமிழச்சியின் ஒரு கவிதை

சூர்ப்பனகையின்
மூக்கையும் முலையையும்
அறுத்த‌ ராம‌ன்
ந‌ல்ல‌வென்றால்!
சீதையின்
மூக்கையும் முலையையும்

அறுக்காத‌ ராவ‌ண‌ன் ஏன்
கெட்ட‌வ‌ன் ஆனான்!
விலெகா இனிமேலும் நீ சும்மா இருக்க‌லாமா?! சொறிடா உன் ம‌ண்டைய‌ கேளுடா ஒரு கேள்விய

அடுத்த‌ பெண் மீது
ஆசைப்படாத‌ ராமன்
ந‌ல்ல‌வ‌ன் எனும் ப‌ட்ச‌த்தில்.,
அடுத்த‌வ‌ர் ம‌னைவியை
அப‌க‌ரித்து சென்ற‌

ராவ‌ண‌ன் ஏன்
கெட்ட‌வ‌னாக‌ இருக்க‌கூடாது?



அய்யயோ! ஆழ‌ம் தெரியாம‌ கால‌விட்ட ‌க‌தையா., அக்காகிட்ட‌யே கேள்வி கேட்டுட்யே!

இது மாதிரி ஆளுங்கள கூட்டி வந்து உன்னைய அடிக்கபோறாங்க போ !!

பி.கு:இதெல்லாமே ஒரு நகைச்சுவைக்காக‌தான்:))

அதுனால‌ ஐயாக்க‌ளே! கோச்சிக்காம‌ ஓட்டை போடுங்க‌

Wednesday, November 19, 2008

தாய்க்காவியம்....

எனக்கெ தெரியும்,எனக்கு கவிதை எழுத தெரியாதுன்னு.,ஆனாலும் ஒரு குருட்டு தைரியம் எழுதிட்டேன்.இயக்குனர்பார்த்திபன்(அவர் எங்கே? நான் எங்கே?) அவர் கிறுக்கலில் இப்புடி எழுதியிருப்பார் உரைநடையை இரண்டு வரி இரண்டு வரியா எழுதுனா அதாங்க கவிதை.(அது அவரு எழுதினா!)எப்புடியோ நானும் எழுதிட்டேன்.(என்னனுதான்னு எனக்கே தெரியல)


கஞ்சிய எங்களுக்கு கொடுத்துவிட்டு‍‍‍.,
வெறும்
தண்ணியை குடித்தவள்
நீ!

மிஞ்சிய பணத்தில் எல்லாம்
எங்களுக்கு அஞ்சியே!
ஆடைகள் கொடுத்தவள்
நீ!

மக்கிய குப்பைகள் அள்ளி
எங்களின் மானத்தை காத்தவள்
நீ!

பெட்டையாய் பிறந்தாலும்
எங்களுக்குள் ஆண்மையை
அளித்தவள்
நீ!

மட்டயை கட்டிவிற்றே.,
எங்களை மாடிவீட்டிற்கு
உய‌ர்த்திய‌வ‌ள்
நீ!

இப்ப‌டிப்ப‌ட்ட
நீ!நீ!நீ!நீ!நீ!

க‌ட்டையான‌ அன்று.,
ச‌ட்டையை கூட‌
க‌ல‌ட்ட‌ விட‌வில்லை,
எங்க‌ளின் க‌வ‌ர‌வ‌ம்....



தெரியாம எழுதிப்புட்டேன் சாமீ!
என்மேல கடுப்பாகம ஓட்டை போட்டுவிடுங்க :)))


Monday, November 17, 2008

விவகாரத்துக்காண காரணங்கள்:

நகைச்சுவையா பேசுரவுங்களுக்கதான் நண்பர்கள் அதிகமா இருக்கும்,ஏன்னா அந்த இடமே கலகலப்பா இருக்கும் பாருங்க.........

நமக்கு தெரிஞ்சவர் ஒருத்தரு விவகாரத்து வாங்கிட்டாருங்க,அவர்ட போயி நம்மாளு ஒருத்தர் இப்புடி கேட்டுருக்காரு.,ஏங்க நீங்க உங்க மனைவியை விவாகாரத்து பண்ணீங்க அப்படீன்னு,அதுக்கு அவரு சொல்லியிருக்காரு "அவ ஏன் மனைவியா" இருக்கிறதினாலதான்னு.
பாவம் மனுசன் ரொம்ம்ப அவஸ்தைபட்டுருப்பாரு போல‌
………………….****************……………………………

நோயாளி ஒருத்தரு நம்மளுக்கு தெரிஞ்ச டாக்டருக்கிட்ட வந்து சிகிச்சை எடுத்துகிட்டு இருந்தாரு,நோயாளிக்கிட்ட ஒரு நாள் டாக்டர் சொல்லியிருக்காரு நீங்க இன்னும் இரண்டு மணி நேரத்தில சாக போறீங்க,அதனாலே கடைசியா யாரை பார்க்கணும்னு விரும்புரீங்கன்னு கேட்டுருக்காரு உடனே நோயாளி:"நல்ல டாக்டரை "தாங்க நான் கடைசியா பார்க்க விரும்றேன்.
நாசமா போச்சு! இது உங்களுக்கு முன்னமே தெரியாதா?
……………………*******************……………………
நம்ம பயலுவ இப்புடி பேசிக்கிறாய்ங்க மாப்பு!அன்னையர் தினத்தில என்னடா செஞ்ச? அதுக்கு இன்னொருத்தன் சொல்றான், அதுவா மாப்பு! சில பொண்ணுங்களை அன்னைகளாக்க முயற்ச்சி பண்ணேன் மாப்பு..

மாட்டீங்கடா நீங்க திருந்தவே மாட்டீங்க !
………***************………
ராங் ரூட்ல வந்த ஒருத்தன போலிஸ் மடக்கி இப்புடி கேக்கிறாரு:தம்பி ஏம்பா,ராங்கா வந்தே, அதுக்கு இவன் சொல்றான்:சரியான ரூட்ல வ‌ந்தா உங்களை பார்த்துருக்க முடியாதே சார்!
மடக்கிப்புட்டியே மன்னாரு....
……………*****************………………….
என்மேல கடுப்பாகம ஓட்டை போட்டுவிடுங்க :)))

Sunday, November 16, 2008

திரிஷாவின் அரை நிர்வாண போஸ்!

வலைப்பதிவு உலகமே சட்டக்கல்லூரி சம்பவத்தினால் கொதிப்படைஞ்சிருக்கு.,இப்படியே இருந்தா நல்லாவா இருக்கு கொஞ்சம் கூலாவுங்கப்பு...............
எல்லாரும் கோவமா இருந்ததாலே குழைந்தைகள் தின வாழ்த்து சொல்லமுடியல.,அதுனாலே இன்னிக்கு சொல்லிக்கிறேன்.
திரிஷா குட்டிக்கு குழந்தையர் தின வாழ்த்துக்கள் :
.......................................... *************************...............................................

ஏம்மா இப்புடி சட்டை போடாம நிக்கிறியே நாலு பேர் பார்த்தா என்ன சொல்லுவாக!சட்டை போட்டுக்கடி கண்ணு!(இதாங்க, திரிஷாவின் அரை நிர்வாண போஸ் :-))
சட்டை போட்டுக்க சொன்னா தரையிலே சிரிக்கிரதை பாரு!!!



பள்ளிக்கூடம் போறியத்தா, பத்திரமா போயிட்டு வாத்தா!கார்க்கி பார்த்தாருன்னா லெட்டர் கொடுத்துருவாரு,காலங்கெட்டுகெடக்கு தாயி!
கேள்வி:திரிஷாவுக்கு முன்னாடி இருந்தது,இப்ப இல்ல என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?
எல்லாரும் என் மேல கடுப்பாகம இப்படி சிரிச்சிக்கிட்டு தமிழிஷ்ல ஓட்டை போட்டுருங்க சாமி :))